இது ஒரு தொடர் கதை... கதைகளுக்குரிய இலக்கணம் எதுவும் இல்லாமல் கால் போகும் போக்கில் செல்லும்... முதலில் இதற்கு கதைக் கலாம் கிடையாது.. கதையில் வரும் பாத்திரங்கள் அறிமுகம் கிடையாது...
குட்டி மீண்டும் மீண்டும் யோசித்து கொண்டே இருக்கிறான்.. என்ன செய்ய? எதுவும் தெரியவில்லை? இப்போது எல்லாம் அவனுக்கு இருக்கும் ஒரே சொந்தம் அந்த யோசனை மட்டும்தான். . சில சமயங்களில் அவன் வாய் விட்டு பேசுவதற்கும அதுதான் உதவியாக இருந்தது... இருக்கிறது..
குட்டிக்கு என்று மனம் இல்லை என்றால்.. அவனுடைய கற்பனை இல்லை என்றால்.. சில சமயங்களில் நினைத்து பார்க்கவே பயப்பட்டான்.. எல்லாம் அவன் தேடிக் கொண்ட விதி...
வேலை.. முடிந்த பிறகு நண்பர்கள்.. இரவில் தூக்கம் வராமல் எதையாவது செய்து கொண்டிருப்பது... இப்படியாக அவனுடைய நிகழ்காலம் கழிந்து கொண்டிருக்கிறது...
ஷைலஜாவின் அழுத வார்த்தைகள் சில நேரங்களில்.. மனதின் அடியாழத்தில் இருந்து எழும்போது கண்களில் கண்ணீர்... ஆனாலும் மனது நிறைந்திருக்கிறது..
கவிதா அவனை பிரியும் பொது இருந்த துக்கம்... இப்போது இல்லை.. என்னிடம் பேச முடியாது.. நான் உங்ககிட்ட இனிமேல் பேச மாட்டேன்... நடிக்கவில்லை... உண்மையான திறந்த மனதுடன் சொல்லும் பொது அவளை அறியாமல் குரல் தழுதழுத்தது... அந்த நிமிடத்தில் குட்டி அழுதான்.. நீண்ட நாட்கள் கழித்து பிறருக்காக அழுதான்.. அதில் அவனுடைய சுய நலமும் இருந்தது.. எந்த ஒரு தொடர்பின் காரணமாக இந்த ஒரு வருட காலம் தனிமையை மறந்து இருந்தானோ, அது மீண்டும் வருவதை நினைத்து அழுதான்.. தனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்தான் இறைவன் என்று அழுதான் ..
அந்த சம்பவங்கள் முடிந்து விட்டன.. இப்போது மறுபடியும் வேலை... வேலைக்கான நண்பர்கள் என்று அவனுடைய பொழுது கழிந்து வருகிறது...
அவனை சராசரியான மனிதனாக இருக்க சொல்லி தோழி ஒருத்தி கேட்டால்... அவன் கூறினான்.. என்னை கடவுள் சராசரி மனிதன் போல படித்திருந்தா நானும் சராசரியாக இருந்திருப்பேன் என்று..
பணம், புகழ் எதுவும் இல்லாமல் இருந்து விடலாம்.. ஆனால் வாழ்க்கைக்கான ஒரு பிடிப்பு இல்லாமல் எப்படி நாட்களை கடத்துவது என்று யாராவது சொல்லிக் கொடுத்தால் தேவலை...
எல்லாமும் வெறுத்து விட்டது போன்ற விரக்தியான நிலை.. ச்சீ என்னடா வாழ்க்கை என்ற அங்கலாய்ப்பு .. அங்கலாய்ப்பு இருந்து என்ன செய்ய...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment