மனது இன்று மிகவும் பாரமாக இருந்தது. ஏன் என்று தெரியவில்லை... எல்லாம் பழகி பழகி போய்விட்டதால் வந்த சலிப்பாகவும் கூட்ட இருக்கலாம்... இந்த உடலே ஒரு வெற்றிடம் அதை கூட என்னால் சில நேரங்களில் உணர முடிவதில்லை... எல்லாம் மாயை மாயை மாயை மாயை மாயை மாயை என்று நினைத்து அனைத்தையும் ஒதுக்கிவிட்டு வெளியே வரமுடியவில்லை .. வரும் வழியும் தெரியவில்லை.. . பாதையை தேடிக் கொண்டே எனது பயணத்தை தொலைத்து கொண்டிருக்கிறேன்..
எல்லா உறவுகளிலும் ஒரு சலிப்பு ஏற்பட்டு போனது.. என்னுடைய இந்த புதிய பரிமாணத்தின் பயணம் எதை தேடி என்பதும் புரியவில்லை..
இறைவா .. நீண்ட நாள் கழித்து உனக்கு கடிதம் எழுதுகிறேன்... என்னை என்ன செய்வதாக உத்தேசம்... என்னை பேசாமல் எடுத்து கொள்ளலாமே... நாளை என்ன நடக்கும்.. என்பதை பற்றி கவலை கொள்ள தேவையில்லை என்கிறது ஒரு மனது.. ஆனால் அதை ஏற்க மறுக்கிறது.. நாளை குறித்த பயன்களில் தவித்து கொண்டிருக்கிறது... இதில் இரண்டாவதே பெரும்பாலான நேரங்களில் தன்னுடைய வெற்றி கொடியை பறக்க விடுகிறது..
நிர்ணயிக்கப்பட்ட வெற்றி தோல்விகள்.. அதை அனுபவிக்கவா.. அதில் இருந்து விலகி நின்று வேடிக்கை பார்க்கவா... தெரியவில்லை... ஏதோ வாழ்க்கை கடந்து கொண்டிருக்கிறது.. நண்பர்களின் உற்சாகமும் என்னுடைய பரிதவிப்புமாக காலம் மெதுவாக கரைந்து கொண்டு இருக்கிறது... எங்கே வாழ்க்கை தொடங்கியது அது எங்கே எப்படி முடிய போகிறது என்பது புரியவில்லை.. எல்லா உறவுகளும் போலித்தனத்தை ஒரு முகமுஉடியை கையில் வைத்து கொண்டு இருப்பதால் எல்லாமுமே விரைவில் வெகுவிரைவில் நீர்த்து போகின்றன.. ..
உள்ளே பயணிக்கிறேன்... மெது மெதுவாக தொடர்ந்தது அது மட்டும் நடந்து கொண்டிருக்கிறது.. என்னையும் அறியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது... இறைவா இன்றைய நாள் இனியதாக கழிந்தது.. அதற்காக உனக்கு நன்றி... இனிமேல் வரும் காலங்களுக்கும் உனக்கு நன்றி.. விந்தைக்குரிய கிருஷ்ணா சலமே ஹரி ஓம் நமோ நாராயணா... என்னுடைய அன்பான அப்பாவின் வாசகங்கள் அதை எளிதில் விட்டு விட தோணவில்லை..
Sunday, March 30, 2008
Tuesday, March 25, 2008
காற்றின் போக்கில்...
காற்றின் அலைவரிசை கேட்கிறதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழி கின்றதா நெஞ்சம் நனைகின்றதா காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதை செந்தேனை ஊற்றி கண்ணே உன் வாசல் சேர்த்தேன் ,...
--- இந்த கவிதை வரிகளை நினைத்து நினைத்து கண்ணீர் சிந்த்திய காலங்களை நினைத்து பார்க்க தோன்றியது... எல்லாம் எதற்காக. ... என்னுடைய முட்டாள் தனமான காதலே என்னை எனக்குள் சிந்திக்க வைத்தது... என்னை திரும்பி பார்க்க வைத்தது... ஒரு வேளை என் கவிதா என்னுடைய வாழ்க்கையில் வராமல் போய் இருந்தால் என்னை நான் உணர தொடங்கி இருக்க மாட்டேன் ... நடந்தவைகள் எல்லாம் மிக நன்றாக நடந்தன.. நடக்கின்றவைகளும் கூடத்தான்.. எதிர்காலத்தை பற்றி தெரியாது... அதை பற்றிய கவலைகளும் இல்லை...
வாழ்க்கை அதன் போக்கில் அதனுடைய இசையை மீட்டிக் கொண்டிருக்கிறது.. அதன் சுகந்தத்தை அனுபவித்து கொண்டே இருக்கிறேன்... ஒவ்வொரு வினாடிகளும் மெதுவாக மிக மெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கின்றன...
ஒரு காபி குடிப்பதை போலத்தான் என்னுடைய இத்தனை காலமும் போனது.. ஒரு குவளை காப்பி நம்முடைய கையில் கொடுத்தவுடன் இருக்கும் சூட்டில் அதன் சுவை தெரியாது... மிக மெதுவாக அது ஆற தொடங்கும் போது அதன் சுவை மெல்ல மெல்ல உணரத் தொடங்கும்.. முழுமையாக உணரத் தொடங்கும் போது வெறும் குவளை மட்டுமே கையில் இருக்கும்... ஹா ஹா ஹா .. எல்லாவற்றையும் நின்று நிதானித்து பார்த்தால் சிரிப்பாக வருகிறது...
என்னுடைய பயணம் எதை நோக்கி செல்கிறது... நிறைய விடைகள் என்னிடம் ஆனால் விடைக்கான வினாக்கள் இல்லாமல் குவிந்து கிடக்கின்றன..
சுற்றியிருக்கும் மனிதர்களிடம் எதுவும் இல்லை.. ஆனால் அவர்களிடம்தான் எல்லாம் இருப்பதாக ஒவ்வொரு மனிதனும் நினைப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது... என்னுடைய இந்த பிளாக்கை படிப்பவர்களுக்கு '' என்னாடா இது ஒரு , ஏதோ ஒரு பைத்தியம் டைப் பண்ணியிருக்கு போல அப்படின்னு தோனும்... தோணனும் அது பற்றி நான் என்றைக்கும் கவலைப்படுவதே இல்லை.. இது வெறும் வார்த்தை ஜாலங்கள் நிறைத்த, கவிதைகள் புதைந்த , கருத்து செறிவு கொண்ட ஒரு மனிதனின் எழுத்துகள் இல்லை.. அப்படி எழுதுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்... மனதுக்கு எதை எழுத தோன்றுகிறதோ அதை எழுதிவிட்டு போகிறேன்...
எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்... அதைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனே .. இப்படியாகத்தான் இருக்கும்.. இன்னும் எத்தனை வருடங்கள் இந்த போலியான முகமூடி போட்டிருக்கும் மனிதர்களுக்குள் நானும் ஒரு நடிகனாக, கை தேர்ந்த நடிகனாக நடித்து கொண்டிருப்பேன் என்று தெரியவில்லை...
விரைவில் வெகு விரைவில் இந்த வாழ்க்கையை விட்டு என்னுடைய இறைவனைத் தேடி பயனிக்கணும்.. இந்த இருபத்தைந்து வயதுக்குள்ளாகவே வாழ்ந்து முடிந்த சலிப்பு.. இது இப்படியாகத்தான் இருக்கும் என்று தெரிந்து போனவுடன் அதைப் பற்றிய தேடல் இல்லாமல் போகிறது...
என்னுடைய இந்த பதிவுகள் என்பவையே ஒரு முட்டாள் தனமான விஷயம் இல்லையா... இருக்கும்.. இருந்து விட்டு போகட்டும்..
--- இந்த கவிதை வரிகளை நினைத்து நினைத்து கண்ணீர் சிந்த்திய காலங்களை நினைத்து பார்க்க தோன்றியது... எல்லாம் எதற்காக. ... என்னுடைய முட்டாள் தனமான காதலே என்னை எனக்குள் சிந்திக்க வைத்தது... என்னை திரும்பி பார்க்க வைத்தது... ஒரு வேளை என் கவிதா என்னுடைய வாழ்க்கையில் வராமல் போய் இருந்தால் என்னை நான் உணர தொடங்கி இருக்க மாட்டேன் ... நடந்தவைகள் எல்லாம் மிக நன்றாக நடந்தன.. நடக்கின்றவைகளும் கூடத்தான்.. எதிர்காலத்தை பற்றி தெரியாது... அதை பற்றிய கவலைகளும் இல்லை...
வாழ்க்கை அதன் போக்கில் அதனுடைய இசையை மீட்டிக் கொண்டிருக்கிறது.. அதன் சுகந்தத்தை அனுபவித்து கொண்டே இருக்கிறேன்... ஒவ்வொரு வினாடிகளும் மெதுவாக மிக மெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கின்றன...
ஒரு காபி குடிப்பதை போலத்தான் என்னுடைய இத்தனை காலமும் போனது.. ஒரு குவளை காப்பி நம்முடைய கையில் கொடுத்தவுடன் இருக்கும் சூட்டில் அதன் சுவை தெரியாது... மிக மெதுவாக அது ஆற தொடங்கும் போது அதன் சுவை மெல்ல மெல்ல உணரத் தொடங்கும்.. முழுமையாக உணரத் தொடங்கும் போது வெறும் குவளை மட்டுமே கையில் இருக்கும்... ஹா ஹா ஹா .. எல்லாவற்றையும் நின்று நிதானித்து பார்த்தால் சிரிப்பாக வருகிறது...
என்னுடைய பயணம் எதை நோக்கி செல்கிறது... நிறைய விடைகள் என்னிடம் ஆனால் விடைக்கான வினாக்கள் இல்லாமல் குவிந்து கிடக்கின்றன..
சுற்றியிருக்கும் மனிதர்களிடம் எதுவும் இல்லை.. ஆனால் அவர்களிடம்தான் எல்லாம் இருப்பதாக ஒவ்வொரு மனிதனும் நினைப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது... என்னுடைய இந்த பிளாக்கை படிப்பவர்களுக்கு '' என்னாடா இது ஒரு , ஏதோ ஒரு பைத்தியம் டைப் பண்ணியிருக்கு போல அப்படின்னு தோனும்... தோணனும் அது பற்றி நான் என்றைக்கும் கவலைப்படுவதே இல்லை.. இது வெறும் வார்த்தை ஜாலங்கள் நிறைத்த, கவிதைகள் புதைந்த , கருத்து செறிவு கொண்ட ஒரு மனிதனின் எழுத்துகள் இல்லை.. அப்படி எழுதுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்... மனதுக்கு எதை எழுத தோன்றுகிறதோ அதை எழுதிவிட்டு போகிறேன்...
எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்... அதைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனே .. இப்படியாகத்தான் இருக்கும்.. இன்னும் எத்தனை வருடங்கள் இந்த போலியான முகமூடி போட்டிருக்கும் மனிதர்களுக்குள் நானும் ஒரு நடிகனாக, கை தேர்ந்த நடிகனாக நடித்து கொண்டிருப்பேன் என்று தெரியவில்லை...
விரைவில் வெகு விரைவில் இந்த வாழ்க்கையை விட்டு என்னுடைய இறைவனைத் தேடி பயனிக்கணும்.. இந்த இருபத்தைந்து வயதுக்குள்ளாகவே வாழ்ந்து முடிந்த சலிப்பு.. இது இப்படியாகத்தான் இருக்கும் என்று தெரிந்து போனவுடன் அதைப் பற்றிய தேடல் இல்லாமல் போகிறது...
என்னுடைய இந்த பதிவுகள் என்பவையே ஒரு முட்டாள் தனமான விஷயம் இல்லையா... இருக்கும்.. இருந்து விட்டு போகட்டும்..
Thursday, March 20, 2008
நானும் மதங்களும்...
நான் இந்து சமயத்தில் பிறந்ததாக கூறி வளர்க்கப்பட்டவன்... என்னுடைய மதம் எனக்கு எல்லாவித சுதந்திரங்களையும் தந்திருக்கிறது... ஆனால் நான் மதவாதி இல்லை. மதங்களின் சடங்குகளையும், அதன் புராணக்கதைகளையும் நான் நம்புவதில்லை .. ஆனால் இந்து மதத்தின் தாத்பரியங்கள், என்னை வியக்க வைத்திருக்கின்றன... என்னுடைய மதம் எனக்கு எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்காதது எனக்கு பிடித்திருக்கிறது...
அனைத்து மதங்களில் இருந்தும் எனக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்து கொண்டிருக்கிறேன். . பகவத் கீதையும் , பைபிளையும் படித்திருக்கிறேன்... இரண்டின் சாராம்சமும் ஒன்றாகத்தான் இருக்கின்றன.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது... எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது... எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்... எல்லாம் மாயை ... கீதை .. சூரியனுக்கு கீழே செய்யப்படுகின்ற எல்லாவற்றையும் மாயை என்று கண்டேன் - பிரசங்கி (பைபிள்)
ஆனால் இந்த மதங்கள் என்று ஒன்று இருந்திருக்காவிட்டால் இத்தனை சண்டை சச்சரவுகள், பாலியல் வன்முறைகள் என்று எதுவும் இருந்திருக்காது... உலகத்தில் தற்போது நிலவும் இந்த பிரச்சினைகளுக்கு மதங்களும் அதை ஆட்டுவிக்கிற மடாதிபதிகளும், பாதிரியார்களும் தான் குற்றவாளிகள்... இறைவனை தேடி ஏன் கோவிலுக்கும், சர்ச்சுக்கும் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்??
எது உங்களை ஓட சொல்லியது... நீங்கள் சார்ந்து இருக்கும் இந்த சமுதாயம் போலியான பல முகங்களை கொண்டிருக்கிறது... நீ உன்னை பற்றி அறிந்து கொள்ள கூடாது ... அறிந்து கொள்ளும் வாய்ப்பும் உனக்கு வழஅங்கப்படக் கூடாது என்பதில் மதங்கள் முதன்மையாக இருக்கின்றன...
துதித்து கொண்டாடப்பட வேண்டிய கடவுள் ஏன் ? நாம் செய்யும் குற்றங்களை தண்டிக்கும் ஒருவராக மாறியது ஏன்? அவரை அந்தளவுக்கு கொடுமையானவராக மாற்றியது யார் குற்றம்? ஏன் உங்களுடைய கடவுளை கும்பிட கோவிலில் கட்டணம் வசூலிக்கிறார்கள்... இ து கடவுள் மறுப்பு கொள்கை அல்ல.. அவரை மாற்றியது யார்?? இதை சொல்வது யார்?
எல்லாம் இந்த சமுதாயம்... அதை உருவாகிய மதவாதிகள்தான்... எல்லா மதத்தையும் தான் நான் குறை சொல்கிறேன்.. .. உன்னுடைய அன்பான கடவுள் மனிதர்கள் உருவாகிய கோவில்களில் மட்டும்தான் இருப்பாரா? அன்பான கடவுள் உன்னிடம்தான் இருக்கிறார். .. ஆனால் எந்த ஒரு மனிதனும் கடைசி வரை அதை உணர்வதில்லை... உணர்வதர்காகவும் அவனை இந்த சமுதாயமும், அவனை சுற்றியிருக்கும் அமைப்புகளும் கட்டுப்பாடுகளும் அனுமதிப்பதில்லை..
ஒரு குழ்ந்தை பிறக்கிறது... அந்த குழந்தை அதுவின் போக்கில் வளருகிறதா???? இல்லை அவன் பெற்றோர், உறவினர்கள் என்று அவனை சுற்றியிருக்கும் மனிதர்களிடம் இருந்துதான் விஷயங்களை கற்கிறான்.. ஆனால் அவனுக்கு கற்றுக் கொடுக்கப்படும் விஷயங்கள் ஒரு பரிபூரனமானதாக இருக்கிறதா??? இல்லை.. எப்படி இந்த சமுதாயத்தில் வாழ்வது என்று கற்றுக் கொடுக்கிறார்களே தவிர அவனை அவனாக வாழ விடுவதில்லை... குழந்தைக்கு உரிய மதிப்பை மரியாதையை கொடுக்கவில்லை... தன்னுடைய குழந்தை இந்த கேடு கேட்ட சமுதாயத்தில் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று என்னவெல்லாமோ செய்கிறார்கள்... ஆனால் உண்மையான ஒரு விஷயத்தை மறந்துவிட்டு... அதே சமயம் வாழ்க்கையில் அவனுக்கு ஏற்படும் தோல்விகள் அவனுக்கு சில விஷயங்களை கற்றுக் கொடுக்கும் பொது அவன் யோசிக்க ஆரம்பிக்கிறான்... நான் யார்? என்ர கேள்வி அவனில் எழும்பினாலும் விடை தேடும் வழி இல்லை... அம்மணமாக இருக்கும் ஊரில் ஆடை அணிந்தவன் கோமாளி ஆகிவிடுகிறான் என்பதை போல ஆகவும் அவன் விரும்புவதில்லை... எனவே அவன் தன்னுடைய நடிப்பை தொடர்கிறான் இறக்கும் வரை...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
நானும் நடிப்பை தொடர்ந்து கொண்டுதான் இருந்தேன் ... தொடர வேண்டிய கட்டாயங்கள் ஏற்படுகின்றன... ஒரு நாள் என்னுடைய இந்த நடிப்பு முழுமையாக நின்று போகும்.. அந்த நாள் நான் ஒரு பைத்தியமாக கூட தெரியலாம்.. அது பற்றிய கவலை இல்லை....
''குட்டி" இன்னும் முடிக்கவில்லை... தன்னுடைய பயணத்தை தனக்குள்ளே தொடர்ந்து கொண்டு இருக்கிறான்....
அனைத்து மதங்களில் இருந்தும் எனக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்து கொண்டிருக்கிறேன். . பகவத் கீதையும் , பைபிளையும் படித்திருக்கிறேன்... இரண்டின் சாராம்சமும் ஒன்றாகத்தான் இருக்கின்றன.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது... எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது... எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்... எல்லாம் மாயை ... கீதை .. சூரியனுக்கு கீழே செய்யப்படுகின்ற எல்லாவற்றையும் மாயை என்று கண்டேன் - பிரசங்கி (பைபிள்)
ஆனால் இந்த மதங்கள் என்று ஒன்று இருந்திருக்காவிட்டால் இத்தனை சண்டை சச்சரவுகள், பாலியல் வன்முறைகள் என்று எதுவும் இருந்திருக்காது... உலகத்தில் தற்போது நிலவும் இந்த பிரச்சினைகளுக்கு மதங்களும் அதை ஆட்டுவிக்கிற மடாதிபதிகளும், பாதிரியார்களும் தான் குற்றவாளிகள்... இறைவனை தேடி ஏன் கோவிலுக்கும், சர்ச்சுக்கும் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்??
எது உங்களை ஓட சொல்லியது... நீங்கள் சார்ந்து இருக்கும் இந்த சமுதாயம் போலியான பல முகங்களை கொண்டிருக்கிறது... நீ உன்னை பற்றி அறிந்து கொள்ள கூடாது ... அறிந்து கொள்ளும் வாய்ப்பும் உனக்கு வழஅங்கப்படக் கூடாது என்பதில் மதங்கள் முதன்மையாக இருக்கின்றன...
துதித்து கொண்டாடப்பட வேண்டிய கடவுள் ஏன் ? நாம் செய்யும் குற்றங்களை தண்டிக்கும் ஒருவராக மாறியது ஏன்? அவரை அந்தளவுக்கு கொடுமையானவராக மாற்றியது யார் குற்றம்? ஏன் உங்களுடைய கடவுளை கும்பிட கோவிலில் கட்டணம் வசூலிக்கிறார்கள்... இ து கடவுள் மறுப்பு கொள்கை அல்ல.. அவரை மாற்றியது யார்?? இதை சொல்வது யார்?
எல்லாம் இந்த சமுதாயம்... அதை உருவாகிய மதவாதிகள்தான்... எல்லா மதத்தையும் தான் நான் குறை சொல்கிறேன்.. .. உன்னுடைய அன்பான கடவுள் மனிதர்கள் உருவாகிய கோவில்களில் மட்டும்தான் இருப்பாரா? அன்பான கடவுள் உன்னிடம்தான் இருக்கிறார். .. ஆனால் எந்த ஒரு மனிதனும் கடைசி வரை அதை உணர்வதில்லை... உணர்வதர்காகவும் அவனை இந்த சமுதாயமும், அவனை சுற்றியிருக்கும் அமைப்புகளும் கட்டுப்பாடுகளும் அனுமதிப்பதில்லை..
ஒரு குழ்ந்தை பிறக்கிறது... அந்த குழந்தை அதுவின் போக்கில் வளருகிறதா???? இல்லை அவன் பெற்றோர், உறவினர்கள் என்று அவனை சுற்றியிருக்கும் மனிதர்களிடம் இருந்துதான் விஷயங்களை கற்கிறான்.. ஆனால் அவனுக்கு கற்றுக் கொடுக்கப்படும் விஷயங்கள் ஒரு பரிபூரனமானதாக இருக்கிறதா??? இல்லை.. எப்படி இந்த சமுதாயத்தில் வாழ்வது என்று கற்றுக் கொடுக்கிறார்களே தவிர அவனை அவனாக வாழ விடுவதில்லை... குழந்தைக்கு உரிய மதிப்பை மரியாதையை கொடுக்கவில்லை... தன்னுடைய குழந்தை இந்த கேடு கேட்ட சமுதாயத்தில் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று என்னவெல்லாமோ செய்கிறார்கள்... ஆனால் உண்மையான ஒரு விஷயத்தை மறந்துவிட்டு... அதே சமயம் வாழ்க்கையில் அவனுக்கு ஏற்படும் தோல்விகள் அவனுக்கு சில விஷயங்களை கற்றுக் கொடுக்கும் பொது அவன் யோசிக்க ஆரம்பிக்கிறான்... நான் யார்? என்ர கேள்வி அவனில் எழும்பினாலும் விடை தேடும் வழி இல்லை... அம்மணமாக இருக்கும் ஊரில் ஆடை அணிந்தவன் கோமாளி ஆகிவிடுகிறான் என்பதை போல ஆகவும் அவன் விரும்புவதில்லை... எனவே அவன் தன்னுடைய நடிப்பை தொடர்கிறான் இறக்கும் வரை...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
நானும் நடிப்பை தொடர்ந்து கொண்டுதான் இருந்தேன் ... தொடர வேண்டிய கட்டாயங்கள் ஏற்படுகின்றன... ஒரு நாள் என்னுடைய இந்த நடிப்பு முழுமையாக நின்று போகும்.. அந்த நாள் நான் ஒரு பைத்தியமாக கூட தெரியலாம்.. அது பற்றிய கவலை இல்லை....
''குட்டி" இன்னும் முடிக்கவில்லை... தன்னுடைய பயணத்தை தனக்குள்ளே தொடர்ந்து கொண்டு இருக்கிறான்....
Tuesday, March 18, 2008
நான் வெற்றிடம் தான்
என்னை முழுமையாக ஆராய்ந்து கொண்டிருக்கிறேன் .... எனக்குள்ளே
பயணம் முழுமையாக தொடங்கி இருக்கிறது... வெறும் வெற்றிடத்தை நோக்கிய பயணம் அது... மெதுவாக மிக மெதுவாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை ஒவ்வொரு நிமிடமும் , ஒவ்வொரு கணமும் முழுமையாக அனுபவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன...
ஒரு வேளை என்னை கண்டுபிடிக்கும் இந்த முயற்சியில் நான் , என்னை என்னுடைய ரூபத்தை இழ்ந்து விடலாம்... அதை பற்றிய பயம் இல்லை... எல்லாவற்றையும் கடந்து கொண்டிருக்கிறேன்.. ஐஸ் உருகுவது போல் என் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் உருகி வழிந்து ஓடிக் கொண்டே இருக்கிறது.....
பிரிந்து போன.. மறைந்து போன உறவுகளுக்காய் ஏங்கிய மனசு.. இப்போதெல்லாம் அதை நினைத்து பார்ப்பதே இல்லை...
இதுவும் வாழும் கலைதான்.... வாழ்க்கையை தேடிய எனது பயணம் தொடங்கிவிட்டது.... இந்த பிளாக் படிப்பவர்களுக்கு என்னுடைய இந்த வார்த்தைகள், சிந்தனைகள் புரியாது... விளங்காது... யாருக்கும் புரிய வேண்டியதில்லை... புரியவும் kUdaadhu
பயணம் முழுமையாக தொடங்கி இருக்கிறது... வெறும் வெற்றிடத்தை நோக்கிய பயணம் அது... மெதுவாக மிக மெதுவாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை ஒவ்வொரு நிமிடமும் , ஒவ்வொரு கணமும் முழுமையாக அனுபவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன...
ஒரு வேளை என்னை கண்டுபிடிக்கும் இந்த முயற்சியில் நான் , என்னை என்னுடைய ரூபத்தை இழ்ந்து விடலாம்... அதை பற்றிய பயம் இல்லை... எல்லாவற்றையும் கடந்து கொண்டிருக்கிறேன்.. ஐஸ் உருகுவது போல் என் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் உருகி வழிந்து ஓடிக் கொண்டே இருக்கிறது.....
பிரிந்து போன.. மறைந்து போன உறவுகளுக்காய் ஏங்கிய மனசு.. இப்போதெல்லாம் அதை நினைத்து பார்ப்பதே இல்லை...
இதுவும் வாழும் கலைதான்.... வாழ்க்கையை தேடிய எனது பயணம் தொடங்கிவிட்டது.... இந்த பிளாக் படிப்பவர்களுக்கு என்னுடைய இந்த வார்த்தைகள், சிந்தனைகள் புரியாது... விளங்காது... யாருக்கும் புரிய வேண்டியதில்லை... புரியவும் kUdaadhu
Sunday, March 16, 2008
நான் யார்?
ஏன்? இந்த வாழ்க்கை... எதை தேடி என்னை போக வைக்கிறது.. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் எதையும் நான் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை... இனிமேல் தெரியுமா அதுவும் எனக்கு தெரியாது... இறைவா உனக்கு நான் கடிதம் எழுதிய அந்த நாட்களை தேடிபார்க்கிறேன்.
எல்லாம் நன்றாக இருந்ததாக எனக்குள் நினைப்பு ....
இது ஒரு பைத்தியத்தின் பிளாக் ,,,,
எல்லாம் நன்றாக இருந்ததாக எனக்குள் நினைப்பு ....
இது ஒரு பைத்தியத்தின் பிளாக் ,,,,
புதிய பரிமாணத்தில் ...
புதிய ஒரு பரிணாமத்தை நோக்கி என்னுடைய பயணம் தொடங்கியிருக்கிறது... இறைவா ... நன்றி.
வாழ்ந்த வாழ்க்கைக்காக வருத்தம் இல்லை.. எதிர்காலத்தை நோக்கிய பயம் இல்லை... இன்று இப்பொழுது என்னுடைய வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது...
கவிதை எங்கோ தொலைந்து போனாள்... என்னை சுற்றிலும் தற்போது புதிய நட்பு வட்டம்... புதிய மனிதர்கள்... இந்த புதிய மனிதர்களிடம் இருந்தும் தப்பித்து செல்ல மனம் விரும்புகிறது...
எங்கேயாவது மனிதர்கள் இல்லாத இடம்... என்னுடைய இறைவனை தேடி.. போக வேண்டும்.. முகமூடி இல்லாத மனிதர்கள் இல்லாமல் எந்நாளும் என்னுடைய முகமுஉடியையும் கழஅட்ட முடியாத நிலைமைதான் நிஇடிக்கும்
வாழ்ந்த வாழ்க்கைக்காக வருத்தம் இல்லை.. எதிர்காலத்தை நோக்கிய பயம் இல்லை... இன்று இப்பொழுது என்னுடைய வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது...
கவிதை எங்கோ தொலைந்து போனாள்... என்னை சுற்றிலும் தற்போது புதிய நட்பு வட்டம்... புதிய மனிதர்கள்... இந்த புதிய மனிதர்களிடம் இருந்தும் தப்பித்து செல்ல மனம் விரும்புகிறது...
எங்கேயாவது மனிதர்கள் இல்லாத இடம்... என்னுடைய இறைவனை தேடி.. போக வேண்டும்.. முகமூடி இல்லாத மனிதர்கள் இல்லாமல் எந்நாளும் என்னுடைய முகமுஉடியையும் கழஅட்ட முடியாத நிலைமைதான் நிஇடிக்கும்
Subscribe to:
Posts (Atom)