மனது இன்று மிகவும் பாரமாக இருந்தது. ஏன் என்று தெரியவில்லை... எல்லாம் பழகி பழகி போய்விட்டதால் வந்த சலிப்பாகவும் கூட்ட இருக்கலாம்... இந்த உடலே ஒரு வெற்றிடம் அதை கூட என்னால் சில நேரங்களில் உணர முடிவதில்லை... எல்லாம் மாயை மாயை மாயை மாயை மாயை மாயை என்று நினைத்து அனைத்தையும் ஒதுக்கிவிட்டு வெளியே வரமுடியவில்லை .. வரும் வழியும் தெரியவில்லை.. . பாதையை தேடிக் கொண்டே எனது பயணத்தை தொலைத்து கொண்டிருக்கிறேன்..
எல்லா உறவுகளிலும் ஒரு சலிப்பு ஏற்பட்டு போனது.. என்னுடைய இந்த புதிய பரிமாணத்தின் பயணம் எதை தேடி என்பதும் புரியவில்லை..
இறைவா .. நீண்ட நாள் கழித்து உனக்கு கடிதம் எழுதுகிறேன்... என்னை என்ன செய்வதாக உத்தேசம்... என்னை பேசாமல் எடுத்து கொள்ளலாமே... நாளை என்ன நடக்கும்.. என்பதை பற்றி கவலை கொள்ள தேவையில்லை என்கிறது ஒரு மனது.. ஆனால் அதை ஏற்க மறுக்கிறது.. நாளை குறித்த பயன்களில் தவித்து கொண்டிருக்கிறது... இதில் இரண்டாவதே பெரும்பாலான நேரங்களில் தன்னுடைய வெற்றி கொடியை பறக்க விடுகிறது..
நிர்ணயிக்கப்பட்ட வெற்றி தோல்விகள்.. அதை அனுபவிக்கவா.. அதில் இருந்து விலகி நின்று வேடிக்கை பார்க்கவா... தெரியவில்லை... ஏதோ வாழ்க்கை கடந்து கொண்டிருக்கிறது.. நண்பர்களின் உற்சாகமும் என்னுடைய பரிதவிப்புமாக காலம் மெதுவாக கரைந்து கொண்டு இருக்கிறது... எங்கே வாழ்க்கை தொடங்கியது அது எங்கே எப்படி முடிய போகிறது என்பது புரியவில்லை.. எல்லா உறவுகளும் போலித்தனத்தை ஒரு முகமுஉடியை கையில் வைத்து கொண்டு இருப்பதால் எல்லாமுமே விரைவில் வெகுவிரைவில் நீர்த்து போகின்றன.. ..
உள்ளே பயணிக்கிறேன்... மெது மெதுவாக தொடர்ந்தது அது மட்டும் நடந்து கொண்டிருக்கிறது.. என்னையும் அறியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது... இறைவா இன்றைய நாள் இனியதாக கழிந்தது.. அதற்காக உனக்கு நன்றி... இனிமேல் வரும் காலங்களுக்கும் உனக்கு நன்றி.. விந்தைக்குரிய கிருஷ்ணா சலமே ஹரி ஓம் நமோ நாராயணா... என்னுடைய அன்பான அப்பாவின் வாசகங்கள் அதை எளிதில் விட்டு விட தோணவில்லை..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment