நான் இந்து சமயத்தில் பிறந்ததாக கூறி வளர்க்கப்பட்டவன்... என்னுடைய மதம் எனக்கு எல்லாவித சுதந்திரங்களையும் தந்திருக்கிறது... ஆனால் நான் மதவாதி இல்லை. மதங்களின் சடங்குகளையும், அதன் புராணக்கதைகளையும் நான் நம்புவதில்லை .. ஆனால் இந்து மதத்தின் தாத்பரியங்கள், என்னை வியக்க வைத்திருக்கின்றன... என்னுடைய மதம் எனக்கு எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்காதது எனக்கு பிடித்திருக்கிறது...
அனைத்து மதங்களில் இருந்தும் எனக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்து கொண்டிருக்கிறேன். . பகவத் கீதையும் , பைபிளையும் படித்திருக்கிறேன்... இரண்டின் சாராம்சமும் ஒன்றாகத்தான் இருக்கின்றன.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது... எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது... எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்... எல்லாம் மாயை ... கீதை .. சூரியனுக்கு கீழே செய்யப்படுகின்ற எல்லாவற்றையும் மாயை என்று கண்டேன் - பிரசங்கி (பைபிள்)
ஆனால் இந்த மதங்கள் என்று ஒன்று இருந்திருக்காவிட்டால் இத்தனை சண்டை சச்சரவுகள், பாலியல் வன்முறைகள் என்று எதுவும் இருந்திருக்காது... உலகத்தில் தற்போது நிலவும் இந்த பிரச்சினைகளுக்கு மதங்களும் அதை ஆட்டுவிக்கிற மடாதிபதிகளும், பாதிரியார்களும் தான் குற்றவாளிகள்... இறைவனை தேடி ஏன் கோவிலுக்கும், சர்ச்சுக்கும் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்??
எது உங்களை ஓட சொல்லியது... நீங்கள் சார்ந்து இருக்கும் இந்த சமுதாயம் போலியான பல முகங்களை கொண்டிருக்கிறது... நீ உன்னை பற்றி அறிந்து கொள்ள கூடாது ... அறிந்து கொள்ளும் வாய்ப்பும் உனக்கு வழஅங்கப்படக் கூடாது என்பதில் மதங்கள் முதன்மையாக இருக்கின்றன...
துதித்து கொண்டாடப்பட வேண்டிய கடவுள் ஏன் ? நாம் செய்யும் குற்றங்களை தண்டிக்கும் ஒருவராக மாறியது ஏன்? அவரை அந்தளவுக்கு கொடுமையானவராக மாற்றியது யார் குற்றம்? ஏன் உங்களுடைய கடவுளை கும்பிட கோவிலில் கட்டணம் வசூலிக்கிறார்கள்... இ து கடவுள் மறுப்பு கொள்கை அல்ல.. அவரை மாற்றியது யார்?? இதை சொல்வது யார்?
எல்லாம் இந்த சமுதாயம்... அதை உருவாகிய மதவாதிகள்தான்... எல்லா மதத்தையும் தான் நான் குறை சொல்கிறேன்.. .. உன்னுடைய அன்பான கடவுள் மனிதர்கள் உருவாகிய கோவில்களில் மட்டும்தான் இருப்பாரா? அன்பான கடவுள் உன்னிடம்தான் இருக்கிறார். .. ஆனால் எந்த ஒரு மனிதனும் கடைசி வரை அதை உணர்வதில்லை... உணர்வதர்காகவும் அவனை இந்த சமுதாயமும், அவனை சுற்றியிருக்கும் அமைப்புகளும் கட்டுப்பாடுகளும் அனுமதிப்பதில்லை..
ஒரு குழ்ந்தை பிறக்கிறது... அந்த குழந்தை அதுவின் போக்கில் வளருகிறதா???? இல்லை அவன் பெற்றோர், உறவினர்கள் என்று அவனை சுற்றியிருக்கும் மனிதர்களிடம் இருந்துதான் விஷயங்களை கற்கிறான்.. ஆனால் அவனுக்கு கற்றுக் கொடுக்கப்படும் விஷயங்கள் ஒரு பரிபூரனமானதாக இருக்கிறதா??? இல்லை.. எப்படி இந்த சமுதாயத்தில் வாழ்வது என்று கற்றுக் கொடுக்கிறார்களே தவிர அவனை அவனாக வாழ விடுவதில்லை... குழந்தைக்கு உரிய மதிப்பை மரியாதையை கொடுக்கவில்லை... தன்னுடைய குழந்தை இந்த கேடு கேட்ட சமுதாயத்தில் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று என்னவெல்லாமோ செய்கிறார்கள்... ஆனால் உண்மையான ஒரு விஷயத்தை மறந்துவிட்டு... அதே சமயம் வாழ்க்கையில் அவனுக்கு ஏற்படும் தோல்விகள் அவனுக்கு சில விஷயங்களை கற்றுக் கொடுக்கும் பொது அவன் யோசிக்க ஆரம்பிக்கிறான்... நான் யார்? என்ர கேள்வி அவனில் எழும்பினாலும் விடை தேடும் வழி இல்லை... அம்மணமாக இருக்கும் ஊரில் ஆடை அணிந்தவன் கோமாளி ஆகிவிடுகிறான் என்பதை போல ஆகவும் அவன் விரும்புவதில்லை... எனவே அவன் தன்னுடைய நடிப்பை தொடர்கிறான் இறக்கும் வரை...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
நானும் நடிப்பை தொடர்ந்து கொண்டுதான் இருந்தேன் ... தொடர வேண்டிய கட்டாயங்கள் ஏற்படுகின்றன... ஒரு நாள் என்னுடைய இந்த நடிப்பு முழுமையாக நின்று போகும்.. அந்த நாள் நான் ஒரு பைத்தியமாக கூட தெரியலாம்.. அது பற்றிய கவலை இல்லை....
''குட்டி" இன்னும் முடிக்கவில்லை... தன்னுடைய பயணத்தை தனக்குள்ளே தொடர்ந்து கொண்டு இருக்கிறான்....
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல தொடக்கம்... அவசியமான கேள்விகள்.
இந்த வேர்ட் வெரிஃபிகேஷன எடுத்திருங்களேன்...
Post a Comment