Friday, October 11, 2013

எல்லாம் முடிந்தது///    எழுதுவதஏகு என்று எதுவும் இல்லை... இதுவே என்னுடைய கடைசி எழுத்தாக கூட இருக்கலாம். ....       இறைவா என்னை மன்னித்து விடு..... என் மேல் அன்பு கொண்டவர்களுm 

Sunday, September 1, 2013

மீண்டும் ஒரு கடிதம்

இந்த முறை பதிவு கொஞ்சம் வித்தியாசமானது.... ஒரு பதிவை 2 மனங்கள் எழுதுகின்றன இன்றோடு மருத்துவமனைக்கு வந்து 1௦ நாட்கள் ஆகின்றன மீண்டும் தனிமையில் இருக்க இருக்க என்னவெல்லாமோ நினைவுகள் எனக்குள் அரங்கேறி இருந்தன. என்னை சுற்றி எத்தனையோ நோயாளிகள். அவர்களின் அருகில் எப்போதும் யாராவது ஒருவர். அவர்களை பார்க்க அடிகடி யாரோ ஒருத்தர் வந்துகொண்டே இருக்கின்றனர் மனிதர்களிடம் அன்பு, அக்கறை இருக்கிறது.... என்னை பார்கிறேன்.. வாட்டர் கேன், பெட், என எல்லாமும் வெறும் பொருட்களுடன்....... நான் மட்டும் தான்...... கடமைக்கான வாழ்கையே போர்க்களம்..... போர்க்களம் மட்டுமே எதிரில்...... எதிரிகளும் இல்லை. போர் தொடர்ந்து கொண்டிருகிறது என்னிடம் தனிமைக்கும் எனக்குமான போர்....... நீண்ட நேரம் நினைத்து நினைத்து நிஜத்தின் வலியை தாங்க முடியாமல் கண்ணீருடன்  விதைத்த பதிவு.........
ellaam maayai... vinthaikuriya krishna salamae hari om namo narayana....