Tuesday, March 25, 2008

காற்றின் போக்கில்...

காற்றின் அலைவரிசை கேட்கிறதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழி கின்றதா நெஞ்சம் நனைகின்றதா காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதை செந்தேனை ஊற்றி கண்ணே உன் வாசல் சேர்த்தேன் ,...
--- இந்த கவிதை வரிகளை நினைத்து நினைத்து கண்ணீர் சிந்த்திய காலங்களை நினைத்து பார்க்க தோன்றியது... எல்லாம் எதற்காக. ... என்னுடைய முட்டாள் தனமான காதலே என்னை எனக்குள் சிந்திக்க வைத்தது... என்னை திரும்பி பார்க்க வைத்தது... ஒரு வேளை என் கவிதா என்னுடைய வாழ்க்கையில் வராமல் போய் இருந்தால் என்னை நான் உணர தொடங்கி இருக்க மாட்டேன் ... நடந்தவைகள் எல்லாம் மிக நன்றாக நடந்தன.. நடக்கின்றவைகளும் கூடத்தான்.. எதிர்காலத்தை பற்றி தெரியாது... அதை பற்றிய கவலைகளும் இல்லை...
வாழ்க்கை அதன் போக்கில் அதனுடைய இசையை மீட்டிக் கொண்டிருக்கிறது.. அதன் சுகந்தத்தை அனுபவித்து கொண்டே இருக்கிறேன்... ஒவ்வொரு வினாடிகளும் மெதுவாக மிக மெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கின்றன...
ஒரு காபி குடிப்பதை போலத்தான் என்னுடைய இத்தனை காலமும் போனது.. ஒரு குவளை காப்பி நம்முடைய கையில் கொடுத்தவுடன் இருக்கும் சூட்டில் அதன் சுவை தெரியாது... மிக மெதுவாக அது ஆற தொடங்கும் போது அதன் சுவை மெல்ல மெல்ல உணரத் தொடங்கும்.. முழுமையாக உணரத் தொடங்கும் போது வெறும் குவளை மட்டுமே கையில் இருக்கும்... ஹா ஹா ஹா .. எல்லாவற்றையும் நின்று நிதானித்து பார்த்தால் சிரிப்பாக வருகிறது...
என்னுடைய பயணம் எதை நோக்கி செல்கிறது... நிறைய விடைகள் என்னிடம் ஆனால் விடைக்கான வினாக்கள் இல்லாமல் குவிந்து கிடக்கின்றன..
சுற்றியிருக்கும் மனிதர்களிடம் எதுவும் இல்லை.. ஆனால் அவர்களிடம்தான் எல்லாம் இருப்பதாக ஒவ்வொரு மனிதனும் நினைப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது... என்னுடைய இந்த பிளாக்கை படிப்பவர்களுக்கு '' என்னாடா இது ஒரு , ஏதோ ஒரு பைத்தியம் டைப் பண்ணியிருக்கு போல அப்படின்னு தோனும்... தோணனும் அது பற்றி நான் என்றைக்கும் கவலைப்படுவதே இல்லை.. இது வெறும் வார்த்தை ஜாலங்கள் நிறைத்த, கவிதைகள் புதைந்த , கருத்து செறிவு கொண்ட ஒரு மனிதனின் எழுத்துகள் இல்லை.. அப்படி எழுதுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்... மனதுக்கு எதை எழுத தோன்றுகிறதோ அதை எழுதிவிட்டு போகிறேன்...
எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்... அதைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனே .. இப்படியாகத்தான் இருக்கும்.. இன்னும் எத்தனை வருடங்கள் இந்த போலியான முகமூடி போட்டிருக்கும் மனிதர்களுக்குள் நானும் ஒரு நடிகனாக, கை தேர்ந்த நடிகனாக நடித்து கொண்டிருப்பேன் என்று தெரியவில்லை...
விரைவில் வெகு விரைவில் இந்த வாழ்க்கையை விட்டு என்னுடைய இறைவனைத் தேடி பயனிக்கணும்.. இந்த இருபத்தைந்து வயதுக்குள்ளாகவே வாழ்ந்து முடிந்த சலிப்பு.. இது இப்படியாகத்தான் இருக்கும் என்று தெரிந்து போனவுடன் அதைப் பற்றிய தேடல் இல்லாமல் போகிறது...
என்னுடைய இந்த பதிவுகள் என்பவையே ஒரு முட்டாள் தனமான விஷயம் இல்லையா... இருக்கும்.. இருந்து விட்டு போகட்டும்..

No comments: