Sunday, June 29, 2008

கதை சொல்ல போறேன்...

கதைகள் இல்லாத குழந்தை பருவத்தை யாராவது தாண்டி வந்திருப்பார்களா என்று எண்ணிப்பார்த்தால் அதற்கான விடை இல்லை என்பதாகத்தான் இருக்கும்.. ஒவ்வொரு மனிதரின் என்ன ஓட்டங்கள் கதைகளாக மலர்ந்தன... ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு சூழலுக்கும் ஏராளமான கதைகள் இருப்பதாய் நினைக்கிறேன்..
சிறிய வயதில் கதை சொல்வது என்றாலே அங்கே ஒரு பாட்டி கட்டாயமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விசயம்.. பாட்டிகளே இல்லாத இந்த நவீன காலம் கதைகள் இல்லாத வெறும் கட்டாந்த்ரையைதான் குழந்தை பருவத்திற்கு கொடுக்கிறது..
எங்க ஊரு தூத்துக்குடி பக்கம்லாம் ஏராளமான கதைகள் சொல்வார்கள்.. பனிமய மாதாவுக்கு ஒரு கதை, பேய கதை என்று பலவாறாக பட்டியல் நீளும்.. வருடங்கள் ஆக ஆக கதை சொல்வதற்கும் யாருமில்லை... அதை கேட்பதற்கும் நேரம் குறைந்துதான் போகிறது...
எனக்கும் கதை எழுத வேண்டும் என்ற அசை உண்டு . ஆனால் என்னால் நல்ல எழுத்தாளர்களை போல சிந்திக்க முடியாதோ என்ற எண்ணமும் உண்டு..
எழுத வேண்டும்... எழுத வேண்டும் எதை பற்றியாவது எழுத வேண்டும் என்ற எண்ணங்கள் அவ்வப்போது தோன்றினாலும், மனம் சிந்த்திக்க மறுக்கும்...

No comments: